நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு மீண்டும் ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இந்நிலையில், மீண்டும் ஜூலை 18ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment