இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.
முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்து, முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில் ராஜபக்க்ஷ மருத்துவமனையில் இல்லை என்றும், அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.
ராஜபக்க்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று சமூக ஊடகங்களில் காலை செய்திகள் வெளியாகின.
Post a Comment