காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கொள்ளுப்பிட்டி வழுக்காராம விகாரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன் நாடாளுமன்றில் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது, அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment