ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
இதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர், மேமன் ஹனபி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இன்று மாலை பிறை பார்த்து உரிய ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடக அறியத்தருமாறு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அத்துடன், பிறை தென்பட்டமை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும், தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ பகிர்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment