பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் முன்வைக்கப்பட்ட சஜித்தின் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
அதேநேரம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
Post a Comment