புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சுப் பதவி என்பது பாரியதொரு பாக்கியம் அல்ல என்றும், அது பெரும் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.
“அமைச்சர் என்ற முறையில் உங்களது சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும். நீங்கள் திறமையாகவும், தூய்மையான நிர்வாகத்தை நோக்கியும் பணியாற்றுவீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “உங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனங்கள் ஊழலற்றவை என்பதை உறுதி செய்து, பொது சேவைக்கு முன்னுரிமை கொடுங்கள்” என்று கூறினார்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச நிறுவனங்களை சீர்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும், அமைச்சர்கள் தங்கள் செயற்திறனின் ஊடாக பொதுமக்களின் கோரிக்கையான ‘சிஸ்டம் மாற்றத்தை’ செய்ய இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முயற்சியில் அரசாங்கத்திற்கு உதவுமாறு இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment