பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகின்றது.
விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே, பேக்கரி உரியாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
Post a Comment