வௌிநாடுகளுக்கு செல்ல காத்திருப்போருக்கு தடுப்பூசியேற்றல் நடவடிக்கை நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, 12 – 19 வயதிற்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறார்களுக்கான தடுப்பூசியேற்றல் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
Post a Comment