ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் காலம்/நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார் என தேசிய நாளிதழ்களில் இன்று(20) வெளியான செய்தியை அடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக குறித்த தேசிய நாளிதழ்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேநேரம், ஜனாதிபதி கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment