கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் சரியான திகதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் சுமார் 45 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
Post a Comment