பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியின் விசேட சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
இந்த நியைில், தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவது தொடர்பாக நாளை கலந்துரையாடப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் எவ்வாறான சுகாதார நடைமுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்பது குறித்தும் நாளைய தினமே தீர்மானிக்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment