அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்திலுமுள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வூதியம் பெறும் வயதை 63 ஆக நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் மூலம் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில் செய்யப்பட்ட திருத்தம் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வுபெறும் கட்டாய வயதெல்லை 61 ஆக இருந்த நிலையில், அந்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment