பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே பயணத்தினை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
நேற்று முதல் மீள அமுல்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கமைய வெளியில் செல்வதற்கான அனுமதி இன்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை செல்லுபடியாகாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னரே தேசிய அடையாள அட்டை முறை செல்லுபடியாகும் என தெரிவித்தார்.
இதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக போக்கவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post a Comment