எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை 1000 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த நிவாரண பொதிகளை நாளை முதல் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment