இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் ஹபராதுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாராங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்று சனிக்கிழமை 796 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 74,852 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 67,831 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 6,637 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 665 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
Post a Comment