நாட்டில் மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 868 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மொத்த எண்ணிக்கை 70,216 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment