கொழும்பு – மினுவாங்கொடை பிரதான வீதியில் ஏக்கலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, பஸ் தரிப்பிட சுவரொன்றுடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
வேனில் பயணித்த, சீதுவ, ரத்தோலுகம மற்றும் பமுனுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment