தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் Sanitizer களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும், உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தமது Sanitizer உற்பத்திகளை பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்க்பட்டுள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களினால் மாத்திரமே பயன்பாட்டுக்கான Sanitizer களை நாட்டுக்குள் பாவனைக்காக விடமுடியும் எனவும் சுடம்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், Sanitizer உற்பத்தினளின் வெளிபுறத்தில், பதிவு இலக்கங்கள் மற்றும் அதற்கான குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment