நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 65 நபர்கள்
உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு காயமடைந்தவர்களுள் 6 பேர் சிகிச்சைகளுக்காக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment