லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இக் குழந்தை கொரோனா நியுமோனியா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் ஆகக் குறைந்த வயதில் கொரோனா தொற்றினால் உயிரழந்த குழந்தை இதுவாகும்.
Post a Comment