வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அவருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியது.
குறித்த இளைஞனை கண்டுபிடிப்பதற்காக சபுகஸ்கந்த பொலிஸார் பொது மக்களின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர்.
சப்புகஸ்கந்த - மாகொல வடக்கு தேவாலய வீதி பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய நிமேஷ் மதுசங்க எனும் இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த இளைஞர் தொடர்பில் தகவல் அறிந்தால் கீழ் வரும் இலக்கங்களுக்கு தகவல்களை அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591599/ 011 2400315
அவசர தொலைபேசி இலக்கம் - 011 2 433333/119
Post a Comment