இலங்கையில் மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 650 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,720 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment