மண்சரிவு அபாயம் காரணமாக, வலப்பனை – ஹங்குராங்கெத்த கண்டி பிரதான வீதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வலப்பனை – ஹங்குராங்கத்த கண்டி பிரதான வீதியில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் 40 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சிப் பதிவாகும் பட்சத்தில், குறித்த வீதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த வீதியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சாரதிகள், ஹங்குராங்கத்த கண்டி வீதியினூடாக, மாவபத்தாவ பிரதேசத்தூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment