நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் நோக்கில் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட மின்னான, விலேகொட, யகுதாகொட, அஸ்ககுல வடக்கு, போபத்த ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கொடகவெல பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட இறக்குவாணை நகரம், இறக்குவாணை வடக்கு மற்றும் தெற்கு, மஸ்இம்புல, கொட்டல ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
Post a Comment