பிறந்து 46 நாட்களேயான சிசுவொன்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலேயே இந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிசு கொவிட் 19 நியுமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இன்று மாலை குறித்த சிசுவின் உடல் பொரளை மயானத்தில் எரிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி பிறந்து 20 நாட்களேயான சிசுவொகன்று லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment