
நேற்றைய தினம் 36 கொரோனா தொற்றாளர்கள் அக்குறணை பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கண்டி நகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து ஒருவரும், குண்டசாலே பகுதியிலிருந்து ஒருவரும், மெனிக்ஹின்ன பகுதியிலிருந்து இருவரும், யடினுவர பகுதியிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment