கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 11 கொரோனா தொற்றாளர்கள் உடபலாத்த (கம்பளை) பிரதேசத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கண்டி நகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலிருந்து எட்டுப் பேரும், பாததும்பரை பகுதியிலிருந்து ஒருவரும், உடுநுவர பகுதியிலிருந்து ஒருவரும், பம்பரதெனிய பகுதியிலிருந்து ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment