கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 437 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 18, 839 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு10, கொழும்பு 15 மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பொகுனுவிட மற்றும் ஹல்தொட பிரதேசங்களைச் சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக பதிவாகியுள்ளதாகவும் முப்படையினரால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 3,419 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment