இலங்கையில் நேற்றைய தினத்தில் 473 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது.
பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 472 பேருக்கும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய கடலோடி ஒருவருக்கும், நேற்று கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,501 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய இரட்டைக் கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 18,963 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் 410 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் 6,168 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment