களுத்துறை – பேருவளை பிரதேசத்தில் ஏற்பட்ட சுனாமி அச்சத்தினால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பப்புவா நியூ கினி தீவில் இன்று முற்பகலில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இதனையடுத்து பேருவளை கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கட்டுக்கதைகள் பரவியதை அடுத்து பல வர்த்தக நிலையங்கள் அங்கு மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல சில வீடுகளிலிருந்தும் மக்கள் பொருட்களை ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கும் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகையில்,
சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக இதுவரை எந்தவொரு எச்சரிக்கையும், சமிக்ஞையும் இலங்கைக்கு விடுக்கப்படவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment