கொழும்பு களுபோவில வைத்தியாசாலையின் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட பணியாளர் 15ம் திகதி பணியிலிருந்தவேளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையி;ன் போது அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தெகிவளையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளி கொஸ்கம கொவிட்19 கிசிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் மினுவாங்கொட பரவலிற்கும் தொடர்பில்லை என வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 16 ஊழியர்களுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment