நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 13 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 26 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 536 ஆக காணப்படுகின்றது.
Post a Comment