புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நாட்டு மக்கள் வாக்களிக்கும் நிலையில் இலங்கையில்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னர் தெற்காசியாவின் முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும்.
நாடு முழுவதும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் வாக்களிப்பு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரியா தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான வழிகாட்டுதல்களின் கீழ் நடைபெறும் தேர்தலில் ( தேசியப்பட்டியல் உட்பட ) புதிய 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும்.
Post a Comment