எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலான காலப்பகுதி வாக்களிப்பு நேரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்களிப்புக்காக மேலும் ஒரு மணித்தியாலத்தை வழங்கி, காலை 7 மணி முதல் 5 மணிவரையில் வாக்களிப்பு நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment