நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் இலங்கையில் 1,863 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மேலும் 29 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதுவரை 877 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் 2066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment