நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 16 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரும் குவைட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 5 பேரும், கடற்படையை சேர்ந்த 3 பேரும், பாகிஸ்தான் மற்றும் பங்களதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா ஒருவரும் அடங்குவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 552 பேர் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனா
இதேவேளை, நாட்டில் கொவிட்19 தொற்றுறதியாகியிருந்த மேலும் 55 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமை கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment