இலங்கையில் இன்றையதினம் மேலும் 26 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில், 14 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் இருந்தும், 4 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், வெலிகந்த ஆதார வைத்தியசாலை,மனுவங்கொடை வைத்தியசாலை,ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை,தெல்தெனிய வைத்தியசாலை இருந்து தலா இருவர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெிரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 1,472 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் 1,950 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 467 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் 39 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment