கொழும்பு - கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு அங்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 23 திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுக்கப்படவுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காலப்பகுதில் சகல மதுபான சாலக்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது
Post a Comment