பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, பெர்ப்பசுவெல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜீன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் அவர்களுக்கு எதிராக பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பது தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் வழங்குப்படுமென கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமையவே தற்போது இவர்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளார்.
Post a Comment