வெலம்பொட பகுதியிலிருந்து உலப்பனை பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 3,055 கிலோ கழிவுத் தேயிலையை கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று உலப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வைத்து சந்தேகத்துக்கிடமான லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே அனுமதிப்பத்திரமின்றி கடத்தி கொண்டு செல்லப்பட்ட கழிவுத்தேயிலை பொதிகள் கைப்பற்றப்பட்டன.
இந்தச் சுற்றிவளைப்பை விஷேட அதிரடிப்படையின் கம்பளை பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதான அதிகாரி புஷ்பகுமார, உப பொலிஸ் பரிசோதகர் சாஹான் சுப சிங்ஹ மற்றும் தனுஸ்க ரட்நாயக்க ஆகியோர் தலைமையிலான குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட கழி வுத்தேயிலை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மேற்படி படையினர் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment