இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் தான் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டி இட இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்காக அவர் முதற்கட்டமாக மலையகத்தில் இளைஞர்களை திரட்டும் சந்திப்புகளையும் சமூக சேவைகளையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முரளிதரனின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக மலையகத்தில் ஏற்கனவே அரசியலில் வேரூன்றி இருக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment