கொலன்னாவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி சென்ற தொடரூந்தில் இன்று அதிகாலை ஹபரனவிற்கும் - பலுகஸ்வெவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று யானைகள் மோதி பலியாகின.
இதனை அடுத்து குறித்த தொடரூந்தும் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு - மட்டக்களப்பு தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் தொடரூந்து தடம்புரண்டுள்ளதால் அதனை மீள் தடமேற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment